இயந்திர உலகில் உற்பத்தியாளர்களின் புத்தாக்க சிந்தனை கொண்ட மாபெரும் தொழில்துறை கண்காட்சியும் சமூக நாள் நிகழ்வுகளும் நேற்று வியாழக்கிழமை முற்பகல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.
நேற்று 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் தொழில்நுட்ப ஆராய்ச்சிப்பிரிவின் கீழ் இயங்கும் மட்டககளப்பு மாவட்ட விதாதா வள நிலையங்கள், கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவப்பிடத்தின் 21ஆம் நூற்றாண்டுக்கான உயர்கல்வித்திட்டத்துடன் இணைந்நு இக் கண்காட்சி நடைபெறுகிறது.
மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாக மைதானத்தில் நடைபெறும் இக்கணகாட்சியின் ஆரம்ப நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொண்டார்.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், விசேட அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உலக தரிசன நிறுவனத்தின் வலய முகாமையாளர் அலெக்ஸ் பெஞ்சமின் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுயதொழில் முயற்சியாளர்கள், உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களது உற்பத்தித்ப் பொருள்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி பொருளாதாரத்தில் நிலைநிமிரச் செய்யும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமும் காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை நடைபெறவுள்ள தொழில்துறை கண்காட்சியும் சமூக நாள் நிகழ்வுகளில் கலை, கலாசார ஆற்றுகைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இக் கண்காட்சியில் 260 தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்களும், 120 பாடசாலை மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக