“பொன் அணிகளின் சமர் என வர்ணிக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் பிரபல பாடசாலைகளான மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரிக்கும், திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் இடையில் 22 வது தடவையாக நடத்தப்படுகின்ற இச் சமரானது இம்முறை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் நாளை (16) சனிக்கிழமை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது 20 ஓவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் போட்டியாக ஆரம்பமாகியது. இது திருகோணமலையில் நடைபெற்று இதில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் (06.05.1994) இல் மட்டக்களப்பு வௌர் மைதானத்தில் வன்பந்து கிரிக்கட் போட்டியாக இடம் பெற்றது. சிவானந்தா கல்லூரி வெற்றி பெற்றது. 1995.05.31 இல் இனிங்ஸ் போட்டியாக நடைபெற்றது. இப்போட்டியானது ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் தேவைப்பட்டதனால் 30 ஓவர் போட்டியாக 1996 இல் நடைபெற்றது. 1997இல் 30 ஓவர் போட்டியாக நடைபெற்றது. தற்போது 50 ஒவர் கொண்ட ஒருநாள் போட்டியாக நடத்தப்பட்டு வருகின்றது.
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியினது அதிபர் திரு. சி. தண்டாயுதபாணி தலைமையில் 1993 முதல் 2003 வரையும், அதிபர் திரு. மா. இராஜரெத்தினம் தலைமையில்; 2004 தொடக்கம் 2010 வரையும், அதிபர் திரு இ. புவநேந்திரன் தலைமையில் 2011 முதல் 2012 வரையும், செ.பத்மசீலன் தலைமையில் 2013 தொடக்கம் இற்றைவரையும் நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பு சிவானந்தாக் கல்லூரியினது அதிபர் திரு. கே. விஜயரெட்ணம் தலைமையில் 1993 தொடக்கம் 1996 வரையும் திரு. கே. இராஜரெட்ணம் தலைமையில் 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2007 வரை பொ. ஆனந்தராஜா தலைமையிலும், 2008 ஆம் வருடம் திரு. ரி. ஆனந்தரூபன் தலைமையிலும், 2009 தொடக்கம் 2010 திரு.ரி. இரவீந்திரமூர்த்தி தலைமையிலும் 2013 தொடக்கம் இற்றை வரை க.மனோராஜ் தலைமையிலம் நடைபெற்று வருகின்றது.
இந்துக் கல்ல}ரிக்குப் பொறுப்பாசிரியர்களாக ஜனாப் அ. பசீர் அமிர், சி. சசிக்குமார், நூ.மு. மஃசூம் ஆகியோர் வழி நடத்தினர். 2010 ம் ஆண்டு முதல் திரு. சி. சசிக்குமார் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியராக வழிநடத்தி வருகின்றார். சிவானந்தாக் கல்லூரிக்கு பொறுப்பாசிரியராக திரு. மோகனகுமார், திரு கிருபாகரன், திரு. சதாசிவம் ,டி.ஆர்.மரியசெல்வம் ஆகியோர் வழி நடத்தி வந்தனர். தற்போது திரு. பு.குகாதரன் பொறுப்பாசிரியராக வழி நடத்தி வருகின்றார்.
போட்டி முடிவுகளானது 1,3,5,7. போட்டிகளில் இந்துக்கல்லூரி தங்களது மைதானத்தில் வெற்றிகளைப் பெற்றது. அதே போல 2,4,6 போட்டிகளில் சிவானந்தாக் கல்லூரி தங்களது மைதானத்தில் வெற்றி பெற்றது.
அதிபர் திரு சி. தண்டாயுதபாணி அவர்களது வேண்டுகோள் சொந்த மைதானத்தில் வெல்;வதைவிட மாற்று அணி மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என அடிக்கடி ஆதங்கப்பட்டுக் கொண்டார். இந்துக் கல்லூரியானது முதல் தடவையாக 2000 ஆண்டில் 8 வது போட்டியில் சிவானந்தா மைதானத்தில் தனது முதல் வெற்றியை பதிவாக்கியது. சிவானந்தா கல்லூரியானது 2007 ஆம் ஆண்டு 15 வது போட்டியில் இந்துக் கல்லூரி மைதானத்தில் தமது முதல் வெற்றியைப் பதிவாக்கியது.
1993 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியானது “டீயவவடந ழக வாந பழடன’ள என அறிமுகப்படுத்தப்பட்டது. 2002ம் ஆண்டில் 10 வது போட்டி முதல் 20வது போட்டி வரை “விபுலானந்தா நினைவுக் கிண்ணம்” வழங்கப்பட்டு வந்தது. இப்போட்டியில் 11 தடவைகள் இந்துக் கல்லூரியும், 9 தடவைகள் சிவானந்தாக் கல்லூரியும் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டது.
21வது போட்டியின் போது புதிய கிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு இராமகிருஷ்ணா கிண்ணம் எனப் பெயரிடப்பட்டது. இதனை முதல் தடவையாக திருகோணமலை மண்ணில் சிவானந்தா வித்தியாலயம் தனதாக்கி கொண்டது.
இது வரை நடைபெற்ற 21 போட்டிகளில் 12 தடவைகள் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினரும், 09 தடவைகள் சிவானந்தா வித்தியாலயமும் வெற்றி பெற்றுள்ளன. இவ்வருடம் 22வது போட்டி மட்டக்களப்பில் சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் நாளை சனிக்கிழமை 16.05.2015 நடத்தப்பட உள்ளது.
இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி பண்பாட இளைஞர் விவகாரம், தொழிநுட்பம், முன்பள்ளி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்..
0 facebook-blogger:
கருத்துரையிடுக