வெள்ளி, 13 நவம்பர், 2015

இரண்டாவது தடவையும் ஜனாதிபதியின் மட்டக்களப்பிற்கான விஜயம் ரத்து

இன்று பிற்பகல் மட்டக்களப்பிற்கு வருகைதரவிருந்த ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன வின் விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் தொரிவித்துள்ளார்

இவர் மட்டக்களப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் வைத்தியசாலை கட்டடம் மற்றும் நீதவான் நீதிமன்றத்திற்காக புதிய கட்டடத்தொகுதி என்பனவற்றை திறந்துவைப்பதற்காக வருகை தரவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், திட்டமிட்ட படி மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புற்று நோய் பிரிவுக் கட்டடம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்வாக கட்டடம் திறந்து வைக்கப்படும் எனவும் இதில், சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்ன, மற்றும் அதன் பிரதியைமச்சர் பைஷால் காசீம் உட்பட அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate