வெள்ளி, 15 மே, 2015

காரைதீவில் கொம்புமுறி விழா

(காரைதீவு விஷேட நிருபர்)

காரைதீவு பிரதேச கலாசார பேரவையானது காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம், காரைதீவு காரைதீவின் இணைய நுழைவாயில் காரைதீவு.ஓர்க் ஆகியற்றின் ஒழுங்கமைப்புடன் காரைதீவின் உள்ள பல பொது அமைப்புக்களுடன் இணைந்து நடாத்தும் காரைதீவின் வரலாற்று நிகழ்வான கொம்புமுறி விழாவுக்கான முதலாவது அழைப்பிதழ் கலாசாரரீதியாக வழங்கி வைக்கும் நிகழ்வானது  காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

ஆலயத்தில் விஷேட பூசை இடம்பெற்று சங்கு முழங்கி பின்னர் தமிழ் கலாசாரரீதியாக ஏடு வடிவில் வடிவமைக்கப்பட்ட முதலாவது அழைப்பிதழை காரைதீவு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சிவானந்தம்  ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வர குருகக்ளிடம் வழங்கி வைத்தார். பின்னர் கலாசார உத்தியோகத்தர் மற்றும் காரைதீவு.ஓர்க் குழுமத்தின் பணிப்பாளர் ஆகியோர் வைபவரீதியாக ஆலய தர்மகர்த்தாக்கள் மற்றும் கப்புகனார் அகியோர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் கொம்புமுறி பற்றிய கருத்துக்கள் அடங்கிய துண்டுபிரசுரமும் அத்துடன் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அலய பிரதம சிவாசாரியார், ஆலய தர்மகர்த்தாக்கள், காரைதீவுப் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் மற்றும் பிரதேச கலாசாரப் பேரவையினைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற உறுப்பினர்கள், காரைதீவுப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் காரைதீவு.ஓர்க் குழும உறுப்பினர்கள் எனப்பலரும் பங்குபற்றினர்.

மேலும் இக் கலாசாரநிகழ்வுகள் எதிர்வரும் 20,21 ம் திகதிகளில் காரைதீவில் மிகவும் கோலாகலமாக இடம்பெறம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதேச கலாசார பேரவையானது காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம், காரைதீவு காரைதீவின் இணைய நுழைவாயில் காரைதீவு.ஓர்க் ஆகியற்றின் ஒழுங்கமைப்புடன் காரைதீவின் உள்ள பல பொது அமைப்புக்களுடன் இணைந்து நடாத்தும் காரைதீவின் வரலாற்று நிகழ்வான கொம்புமுறி விழாவுக்கான முதலாவது அழைப்பிதழ் கலாசாரரீதியாக வழங்கி வைக்கும் நிகழ்வானது  காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

ஆலயத்தில் விஷேட பூசை இடம்பெற்று சங்கு முழங்கி பின்னர் தமிழ் கலாசாரரீதியாக ஏடு வடிவில் வடிவமைக்கப்பட்ட முதலாவது அழைப்பிதழை காரைதீவு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சிவானந்தம்  ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வர குருகக்ளிடம் வழங்கி வைத்தார். பின்னர் கலாசார உத்தியோகத்தர் மற்றும் காரைதீவு.ஓர்க் குழுமத்தின் பணிப்பாளர் ஆகியோர் வைபவரீதியாக ஆலய தர்மகர்த்தாக்கள் மற்றும் கப்புகனார் அகியோர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் கொம்புமுறி பற்றிய கருத்துக்கள் அடங்கிய துண்டுபிரசுரமும் அத்துடன் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அலய பிரதம சிவாசாரியார், ஆலய தர்மகர்த்தாக்கள், காரைதீவுப் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் மற்றும் பிரதேச கலாசாரப் பேரவையினைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற உறுப்பினர்கள், காரைதீவுப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் காரைதீவு.ஓர்க் குழும உறுப்பினர்கள் எனப்பலரும் பங்குபற்றினர்.

மேலும் இவ்மாபெரும் கலாசாரநிகழ்வுகள் எதிர்வரும் 20,21 ம் திகதிகளில் காரைதீவில் மிகவும் கோலாகலமாக இடம்பெறம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate