மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூழாவடிச்சேனை பகுதியிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.நஸீர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்தில் அமைந்துள்ள செங்கல் வெட்டுமிடத்தில் இக் கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கைக்குண்டுகள் நேற்று மாலை செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசம் முன்னர் விடுதலை புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்தமையால் குறித்த குண்டுகள் அவர்களால் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக