மட்டக்களப்பு - படுவான்கரை குடும்பிமலை முருகன் ஆலயத்தின் மூலஸ்தான கதவு படையினரால் உடைக்கப்பட்டு அங்கு மின் இணைப்பிற்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆலயத்தின் முன்வாயிலில் ஆங்கிலத்தில் “கமாண்டோ“ என எழுதியிருப்பதையும் காணமுடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்தகால ஆயுதப்போராட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்தபோது இந்த முருகன் ஆலயம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2007 ஆம் ஆண்டு இராணுவத்தினர் இப்பிதேசத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் பின்னர், குடும்பிமலையில் விகாரை மற்றும் இராணுவ முகாமை அமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2011ஆம் ஆண்டு பிற்பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அந்த மலையில் அமைக்கப்பட்டு அதற்கான மின்மானி மற்றும் உபகரணங்களை பாதுகாக்கும் களஞ்சியமாக முருகன் ஆலய மூலஸ்தானத்தை பயன்படுத்துவதை தற்போது காணமுடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று 18ஆம் திகதி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக