மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக நடாத்தப்பட்ட உடல் கட்டுப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர்கள் முதல் மூன்று இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30மணியளவில் கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டுப்பிரிவும் இணைந்து இந்த உடல் கட்டுப்போட்டியை நடாத்தியது.
மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மாவட்ட விளையாட்டு திணைக்களத்தின் பதில் உத்தியோகத்தர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களம் உருவாக்கப்பட்டு முதன்முறையாக மட்டக்களப்பில் இந்த உடல்கட்டுப்போட்டி நடாத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து பெருமளவான இளைஞர்கள் பங்குகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக உடற்கட்டு போட்டி நடைபெறுவதனால் அதனைக்காண்பதற்காக பெருமளவானோர் மட்டக்களப்பு மாநகரசபையில் குழுமியிருந்தனர்.
இந்த சுற்றுப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சா.சியாம்குமார் முதலாம் இடத்தினையும் எஸ்.அஜந்தன் இரண்டாம் இடத்தினையும் கே.கார்த்தீபன் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்தும் வீரர்கள் கலந்துகொண்டபோதிலும் முதல் மூன்று இடங்களைப்பெற்று மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30மணியளவில் கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டுப்பிரிவும் இணைந்து இந்த உடல் கட்டுப்போட்டியை நடாத்தியது.
மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மாவட்ட விளையாட்டு திணைக்களத்தின் பதில் உத்தியோகத்தர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களம் உருவாக்கப்பட்டு முதன்முறையாக மட்டக்களப்பில் இந்த உடல்கட்டுப்போட்டி நடாத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து பெருமளவான இளைஞர்கள் பங்குகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக உடற்கட்டு போட்டி நடைபெறுவதனால் அதனைக்காண்பதற்காக பெருமளவானோர் மட்டக்களப்பு மாநகரசபையில் குழுமியிருந்தனர்.
இந்த சுற்றுப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சா.சியாம்குமார் முதலாம் இடத்தினையும் எஸ்.அஜந்தன் இரண்டாம் இடத்தினையும் கே.கார்த்தீபன் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்தும் வீரர்கள் கலந்துகொண்டபோதிலும் முதல் மூன்று இடங்களைப்பெற்று மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக