இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகளின் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தினங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய மின்பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை 12ம் திகதி 9.00 - 17.00 கல்லடி, மஞ்சந்தொடுவாய், பூநொச்சிமுனை, நாவலடி, சரவணா வீதியும், வியாழக்கிழமை 14ம் திகதி 9.00 - 17.00 ஏறாவூர், செங்கலடி, ஊறணி, ஆறுமுகத்தன் குடியிருப்பு, மயிலம்பாவெளி, தன்னாமுனையிலும், எதிர்வரும் 15ம் திகதி வெள்ளிக்கிழமை 8.30 - 17.00 கல்லடி, மஞ்சந்தொடுவாய், பூநொச்சிமுனை, நாவற்குடாவிலும் மற்றும் 16ம் திகதி சனிக்கிழமை 8.30 - 17.00 யாட் வீதி, முதலியார் வீதி, அஞ்சல் அலுவலக வீதி ஆகிய இடங்களிலும் பகல் நேர மின்வெட்டு இடம்பெறவுள்ளது.
குறித்த பிரதேசங்களில் அமுல்படுத்தப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான மேலதிக விபரங்களை குறிப்பிட்ட அலுவலகத்தின் தொலைபேசி இலக்கமான 065 222 4439 அல்லது 065 222 2639 இற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக