திங்கள், 30 நவம்பர், 2015

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 20561 விவசாயிகளுக்கு உதவி நிதி வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2014மற்றும்2015ஆம் ஆண்டுகளில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான மானிய உரக்காப்புறுதி திட்டத்தின் கீழ் காசோலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றத...
Share:

இளைஞர்களை எந்த சமூகமும் புறக்கணிக்க கூடாது –ஞா.சிறிநேசன் பா.உ.

இளைஞர்களை எந்தவொரு சமூகமும் புறக்கணிக்ககூடாது.அவர்களின் சக்தியினை சரியான முறையில் ஆக்கபூர்வமான வழிக்கு கொண்டுசெல்வதன் மூலமாக அபிவிருத்தியடைய முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார...
Share:

karaitivunews.com இன் புலமையாளர் பாராட்டுவிழா - 2015.

காரைதீவின் செய்தி இணையதளமாக விளங்குகின்ற எமது சகோதர இணையத்தளமான karaitivunews.com ஊடகமானது வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடாத்திய 2015ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புலமையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும், அம் மாணவர்களை புலமையாளர்களாக்கிய ஆசான்களை கௌரவிக்கும் நிகழ்வும் மற்றும் 2014ம் ஆண்டு க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்த சாதனையாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று...
Share:

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆளுமையுள்ள தலைவர்கள் முடிவு காண வேண்டும்

இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக்காண நல்லாட்சி அரசின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இதனை சாதாகமாக பயன்படுத்தி ஆளுமை மிக்க தலைவர்கள் என்பதை உணர்த்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூ. எம்.பி. ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். இதற்குப் பின்னர் இந்த நாட்டில் இருந்த தலைவர்கள் அனைவரும் பிரச்சினையை வளர்த்துவிட்டார்களே தவிர எவரும்...
Share:

மருந்தாளர் பரீட்சையில் சித்தியடையாவிட்டால் மருந்து விற்பனைக்கான அனுமதி இல்லை

தனியார் மருந்தகங்களில் பணியாற்றுபவர்கள் 20 முதல் 30 வருட கால சேவைக்கால அனுபவம் இருந்தும் மருந்தாளர் பாடத் தொகுதி பரீட்சையில் சித்தியடையாவிட்டால் குறித்த நிலையங்களில் மருந்துகள் விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக ஐ.எம். எஸ். கெல்த் லங்கா லிமிட்டெட்டின் ஆராய்ச்சி உத்தியோகத்தர் எ.இசட். வை. வசந்தராஜன் தெரிவித்தார்.  மட்டக்களப்பு மாவட்ட தனியார் மருந்தகங்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் நடப்பாண்டுக்கான...
Share:

நாட்டில் இனவாத, மதவாத ரீதியாக செயற்பட்டுவரும் அமைப்புகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் : எஸ்.வியாழேந்திரன்

நாட்டில் இனவாத, மதவாத ரீதியாக செயற்பட்டுவரும் அமைப்புகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நாட்டில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இனவாதமும், மதவாதமும் காரணமாகவுள்ளன. இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை மோதல்களை ஏற்படுத்துவதற்கென்றே இனவாத, மதவாத அமைப்புகள் செயற்பட்டு...
Share:

டெங்கு நுளம்புகளின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் துறைநீலாவைணையில்

(இ.சுதா) களுவாஞ்சிகுடி பிரதேச செயலக நிருவாக எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்புகளின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்இகிராம உத்தியோகத்தர்கள்,சமூர்த்தி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புக்களுடன் இடம் பெற்ற டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை பரிசோதனை செய்யும் துரித வேலைத்திட்டம் கடந்த சனிக்கிழமை துறைநீலாவணைக்...
Share:

உலகில் நான்கில் ஒரு பகுதியினர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் –டாக்டர் சுசிலா பரமகுருநாதன்

உலகில் வாழும் மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் மனநோயின் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் திருமதி சுசிலா பரமகுருநாதன் தெரிவித்தார...
Share:

ஞாயிறு, 29 நவம்பர், 2015

சிவானந்தா தேசியப்பாடசாலையின் 88ஆம் ஆண்டு சா.தர மாணவர்கள் அனுசரணையில் கல்விக் கருத்தரங்கு

மட்டக்களப்பு சிவானந்தா தேசியப்பாடசாலையின் 1988ஆம் ஆண்டு சாதாரணதர மாணவர்கணின் அனுசரணையுடன் யாழ் இ;ந்துக் கல்லூரி ஆசிரியர்களால் சிவானந்தா வித்தியாலயம், விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயம் ஆகியவற்றிலிந்து இம்முறை சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவ மாணவிகளுக்கான கருத்தரங்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. நேற்றைய தினம் சிவானந்த தேசியப்பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்ற இக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர்...
Share:

திவிநெகும உத்தியோகத்தர்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்

-எம்.எச்.எம்.அன்வர்- திவிநெகும உத்தியோகத்தர்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் -ஜகத் குமார திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் இவ்வாறு அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத் குமார தெரிவித்தார் ஓட்டமாவடி நகர மண்டபத்தில் திவிநெகும உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த மாநாடு 26.11.2015 அன்று சங்கத்தின்...
Share:

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பதவி வெற்றிடம்

Vacancies – Legal Officer, Accounts Officer, Technical Assistant – National Housing Development Authority – Ministry of Housing and ConstructionApplication Closing Date 2015-Dec-03...
Share:

இலங்கையில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கண்புரை நோய்

இலங்கையின் கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களிடையே கண்புரை நோய் குறித்த விழிப்புணர்வு இல்லை என கண் மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கண்புரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு தேவையான சிகிச்சை அளிக்க போதிய நிதியுதவிகளை பொதுமக்களிடமிருந்து பெறும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கிழக்கிலிருந்து புறப்பட்ட நடை பயணம் ஒன்று தலைநகர் கொழும்பில் முடிவடையவுள்ளது. ‘விஷன் 2020’ எனும் அமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள...
Share:

எச்.ஐ.வி. நோய் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு

சர்வதேச எச்.ஐ.வி. தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி. நோய் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று சனிக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்களம், ஆகிய மூவினங்களையும் சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது எச்.ஐ.வி. நோய் தொற்றும் காரணிகள், இந்தநோய் தொற்றாமலிருப்பதற்கான...
Share:

மட்டு தமிழ் தேசிய மன்றத்தின் உருவாக்கம் கட்சிப் பிளவு இல்லை. பா.அரியம்

(பழுவூரான்) மட்டக்களப்பில் மாவீரர் நாளில் புதிய அமைப்பான மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றம் உருவாக்கப்பட்டு அதனுடாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு 27.11.2015 அன்று பா.உ. சீ.யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் அவரின் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், மற்றும் பொன்.செல்வராசா, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர்...
Share:

சனி, 28 நவம்பர், 2015

சிறைக்கைதிகள் மனிதாபிமான முறையில் விடுவிக்காவிட்டால் அரசில் இருந்து வெளியேற நேரிடும் -சீ.யோகேஸ்வரன் எம்.பி.

நல்லாட்சி அரசாங்கம் மனிதாபிமான முறையில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யாவிட்டால் கிழக்கு மாகாணசபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகியவற்றில் இருந்து வெளியேறவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார...
Share:

தண்ணீரினால் ஏற்படும் நோயினால் 20 செக்கனுக்கு ஒரு குழந்தை இறக்கின்றது - நிபுணர் டாக்டர் வைதேகி ஆர் பிரான்சிஸ்

உலகில் தண்ணீரினால் ஏற்படும் நோய் காரணமாக 20 செக்கன்களுக்கு ஒரு குழந்தை இறப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டாக்டர் வைதேகி ஆர் பிரான்சிஸ் தெரிவித்தார...
Share:

சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட விலையுயர்ந்த மரங்கள் காத்தான்குடியில் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட பெறுமதி மிக்க ஒரு தொகை மரக்குற்றிகள் காத்தான்குடி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டத...
Share:

சிறுவர் சுகாதாரத்தினை உறுதிபடுத்துவோம் கருத்தரங்கு துறைநீலாவணையில்

(இ.சுதாகரன்) சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளிலான செயலமர்வு துறைநீலாவணை தெற்கு பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (28) நேற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரி.தயாளன் தலைமையில் ; நடைபெற்றத...
Share:

பொதுநலவாய அமைப்பின் முதல் பெண் செயலாளர்

மொல்டாவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பொது நலவாய அமைப்பிற்கான புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் பரோனஸ் பெட்ரீஷியா என்பவரே புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்ட்டுள்ளர். கடந்த நான்கு வருட காலமாக அந்தப்பதவியில் இருந்த கமலேஷ் சர்மாமாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்தே பரோனஸ் பெட்ரீஷியா செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுநலவாய அமைப்பின் செயலாளராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம்...
Share:

சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் மட்டக்களப்பு நாவற்காடு மங்கிகட்டு அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று 27ம் திகதி இடம்பெற்றது. சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் மட்டக்களப்பு கரையாக்கந்தீவு கணேசர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று 27ம் திகதி இடம்பெற்றது. சிட்னி...
Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623787

Translate