சனி, 14 நவம்பர், 2015

மட்டக்களப்பு மாநகரசபையின் புத்தகக்கண்காட்சி அங்குரார்ப்பனம்

வாசிப்பை நேசிப்போம் புத்தகங்களை நன்பர்களாக்குவோம் என்ற தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபை ஏற்பாடு செய்த மாபெரும் புத்தக்கக் கண்காட்சியும் மலிவு விற்பனை நிகழ்வும் இன்று காலை 9.00 மணிக்கு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில், பிரதி ஆணையாளர் என்.தனஞ்ஜெயனின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை சலீம் அவர்களும் விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சித்திரவேல் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இக் கண்காட்சியில் பூபாலசிங்கம் புத்தகசாலையின் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன் இவற்றிற்கு 10 - 20 வீத விலைக்கழிவுடன் பொதுமக்கள் புத்தகங்களைக் கொள்வனவு செய்யமுடியும். இக்கண்காட்சி 14, 15, 16 ஆம் திகதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 8.00 மணி வரை காட்சிப்படுத்தப்படுகின்றது
















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate