புதன், 11 நவம்பர், 2015

கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் நடவடிக்கையின் மூலம் மகிழவெட்டுவான் துறைக்கு புதிய வள்ளம் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகி துரைராசசிங்கம் அவர்களிடம் மகிழவெட்டுவான் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அவரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் மகிழவெட்டுவான் துறைக்கு புதிய வள்ளம் செங்கலடி பிரதேச சபையினால் மகிழவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

 மாரி காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்தத்தத்தினால் மேற்படி பிரதேசம் மிகவும் பாதிப்பினை அடைவதாலும் இதனால் மகிழவெட்டுவான் துறையினூடாக மக்கள் பயணிப்பதற்கு மிகவும் சிரமமான நிலை ஏற்படுவதாலும் அப்பிரதேச மக்களால் அமைச்சர் அவர்களிடம் மகிழவெட்டுவான் துறைக்கு ஆற்றுவழிப்பாதைக்கு ஏற்ற விதத்தில் வள்ளம் அமைப்பு ஒன்றினை பெற்றுத் தருமாரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

இதனையடுத்து அமைச்சர் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் மூலம் உள்ளுராட்சி திணைக்களத்தின் உதவியில் செங்கலடி பிரதேச சபையினூடாக நேற்று மகிழவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு மேற்படி வள்ளம் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் செங்கலடி பிரதேச சபைச் செயலாளர் மகிழவெட்டுவான் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் எனப்பலர் கலந்து கொண்டனர். காலத்திற்கு ஏற்ப அமைச்சர் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இவ்வுதவியின் மூலம் அப்பிரதேச மக்கள் மாத்திரம் அல்லாமல் துறைக்கு அப்பால் உள்ள இலுக்கு, ஈரளக்குளம் போன்ற பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் நண்மை அடைவார்கள் என கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் இதன்போது தெரிவித்தனர்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate