செவ்வாய், 10 நவம்பர், 2015

களுதாவளையில் பிழையான அனுமதிகள் மூலம் அமைத்தை கட்டடங்கள் உடைக்க நடவடிக்கை

மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பகுதியில் பிழையான அனுமதிகள் மூலம் அமைக்கப்பட்ட கட்டடங்கள் உடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் தெரிவித்தார்.
வீடு கட்டுவதற்கான அனுமதிகளை வழங்கும் போது, அவற்றை தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே அதற்கான அனுமதியினை வழங்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் பிழையான அனுமதிகள் மூலம் அமைக்கப்பட்ட கட்டடங்கள் உடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
தொழில் நுட்ப உத்தியோகத்தர் நேரில் சென்று பார்வையிடாமல் கட்டடங்கள் அமைப்பதற்கு பிரதேச சபை அனுமதியை வழங்குகின்றது.
இதனால் பல பிரச்சினைகள் உருவாகின்றன. அவ்வாறு பார்வையிடாமல் வழங்கும் அனுமதிகள் மூலம் வரும் பிரச்சினைகளுக்கு பிரதேச சபையே பொறுப்புக் கூறவேண்டும்.
இதுபோன்ற செயற்பாடுகளால் பல பிரச்சினைகள் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு பிழையாக வழங்கிய அனுமதியில் கட்டப்பட்ட கட்டடங்களை உடைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த விடயத்தில் தான் கூடுதலான கவனம் செலுத்தவுள்ளதாகவும் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate