சனி, 14 நவம்பர், 2015

ஐ.நா குழுவின் வருகையை கண்ணீருடன் எதிர்பார்த்திருக்கும் மட்டு மக்கள்

இலங்கைக்கு வருகை தந்துள்ள வலிந்து காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐ. நா வல்லுநர்கள் குழு இன்று மட்டக்களப்பு வருகை தருவதாக கூறப்பட்டதையடுத்து மக்கள் காத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இக்குழுவினர் தற்சமயம் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் அவர்களை சந்திப்பற்காக அதிகமான காணமல்போனோரின் குடும்பங்கள் எதிர்பார்த்த வண்ணம் நீண்ட மணித்தியாலயங்களாக சீரற்ற கால நிலையையும் பொருட்படுத்தாது காத்து நிற்கின்றார்கள்.
மட்டக்களப்பிற்கு வரும் ஐ.நா. குழுவினர், அரசாங்க அதிபர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதுடன், மனிதவுரிமை ஆர்வலர்கள் மற்றும் காணாமல் போனோர் குடும்பங்களையும் சந்தித்து நிலைமைகளை கண்டறியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate