புதன், 4 நவம்பர், 2015

(வனரோபா) தேசிய மரநடுகைத் திட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பம்


கடற்கரைப் பிரதேசத்தைப் பாதுகாத்தல் மற்றும் மண்ணரிப்பை தடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் (வனரோபா) தேசிய மரநடுகைத் திட்டம் கிழக்கிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கோறளைப் பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள முனை முருகன் ஆலயத்தை அண்மித்த நிலப்பரப்பில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் தட்ஷணகௌரி தினேஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன், கடற்படை அதிகாரிகள், கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

கடலரிப்பை தடுத்து கடற்பிரதேசத்தை பாதுகாக்க முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டமானது, வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate