கடற்கரைப் பிரதேசத்தைப் பாதுகாத்தல் மற்றும் மண்ணரிப்பை தடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் (வனரோபா) தேசிய மரநடுகைத் திட்டம் கிழக்கிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கோறளைப் பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள முனை முருகன் ஆலயத்தை அண்மித்த நிலப்பரப்பில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் தட்ஷணகௌரி தினேஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன், கடற்படை அதிகாரிகள், கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக