ஞாயிறு, 15 நவம்பர், 2015

மட்டக்களப்பு நொச்சிமுனையில் தொடர் மழையினால் நீர் மட்டம் அதிகரிப்பு- மக்கள் ஆர்ப்பாடம்



நொச்சிமுனை மக்கள் ஆர்ப்பாட்டம் ; 

கிராமம் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம்

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நொச்சிமுனை 171 A  கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் மீள்குடியேற்ற கிராமத்தில், தாழ் பகுதியில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
 
அப் பகுதி மக்கள் முறையான வடிகான் போன்றவற்றுடன், வீதி போக்குவரத்து வசதிகளையும் செய்து தருமாறு நீருக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் நீரினால் மூழ்யுள்ளன.
இதனால் மக்கள் தங்களுடைய சொந்த இடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்ககளில் தங்கி வருகின்றனர்.
இதற்கமைய 171 A  கிராம சேவகர் ஆர்.கோகுலதாஸ் அவ்விடத்துக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன் மக்களின் பிரச்சினைகளை கேட்டு அதற்கான தீர்வினைப் பெற்றுத் தரும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அப் பகுதி மக்களிடம் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் இக் கோரிக்கை அடங்கிய மனு 171 A கிராம சேவகர் கோகுலதாஸிடம் மக்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate