ஞாயிறு, 17 மே, 2015

கிழக்கு மாகாண அரச உயரதிகாரிகள் மூவர் கம்போடியா பயணம்

உயிர்வாயு தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ளும் நோக்குடன் கிழக்கு மாகாண அரசதுறை உயரதிகாரிகள் மூவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கம்போடியாவிற்கான பயணத்தை மேற்கொள்வதாக ஜனதாக்ஸன் நிறுவனத்தின் தொழினுட்ப அலுவலர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.
இலங்கையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்கிலும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவும் உயிர்வாயு தொழிநுட்பத்தினை விரிவாக்குதல் என்ற திட்டத்திற்கமைவாக இந்த கள விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனதாக்ஸன் நிறுவனத்தின் தொழினுட்ப அலுவலர் அனுலா அன்ரன் தலைமையில் கிழக்கு மாகாண சபை பிரதம செயலாளர் சரத் அமுனுகமகே, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சலீம் முஹம்மத் யூசுப், கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் செயலாளர் உதுமாலெப்பை அப்துல் அஸீஸ் ஆகியோரே கம்போடியா செல்கின்றனர்.ள
எதிர்வரும் 21 ஆம் திகதி வரையான ஐந்து தினங்களும் கம்போடிய நாட்டு உயிர்வாயு தொழினுட்ப அமுலாக்கம் பற்றி இவர்கள் அறிந்து கொள்ளவுள்ளனர்.
அந்நாட்டிலுள்ள தேசிய உயிர்வாயு செயற்றிட்டத்தின் அனுபவ பகிர்வுகளை பெற்றுக் கொள்வதின் ஊடாக இலங்கை கிழக்கு மாகாணத்திலும் இயற்கைக்குக் கேடு விளைவிக்காத இவ்வாறானதொரு செயற் திட்டத்தை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு இந்த கள விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனுலா மேலும் தெரிவித்தார்.
இயற்கை உயிர்வாயு தொழினுட்பத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் சுவிட்ச் ஏசியா (Switch Asia) நிறுவனத்தின் அனுசரணையுடன் நிதியுதவி வழங்குகின்றது. இலங்கையில் இத்திட்டத்தை ஜனதாக்ஸன் நிறுவனமும் பீப்பிள் இன் நீட் (People in Need) செக் குடியரசு நிறுவனமும் இணைந்து அமுல்படுத்துகின்றன.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate