ஞாயிறு, 17 மே, 2015

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 23 வது ஆண்டு நிறைவு விழா

மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 23 வது ஆண்டு நிறைவுவிழா மிக சிறப்பாக நேற்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில்  பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் தலைவர் மு.தயானந்தன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சமூகசேவை திணைக்கள மாகாண பணிப்பாளர் கு.குணநாதன், மட்டக்களப்பு மாவட்டசமூக சேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி,மட்டக்களப்பு சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள நன்நடத்தை பொறுப்பதிகாரி மா.வரதராஜன் மற்றும் அலுவலக அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்று இடம்பெற்ற 23 வதுஆண்டு நிறைவுவிழாவில் தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் ,நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும், விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டது.























Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate