செவ்வாய், 12 மே, 2015

மட்டக்களப்பில் பாரம்பரியங்களை பேணும் வகையில் நடைபெற்ற சலங்கை அணிவிழா

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய கலையாகவும் தமிழர்களின் கலையாகவும் உள்ள கூத்துக்கலையினை பழமைமாறாது பேணும் பணியை கிராமங்கள் மேற்கொண்டுவருகின்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கூத்துக்கலையினை பேணும் பகுதியாக படுவான்கரை பிரதேசம் இருப்பதுடன் பண்பாடுகளையும் கட்டிக்காட்கும் பிரதேசமாகவும் இருந்துவருகின்றது.

படுவான்கரை பிரதேசத்தின் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட களிமடு என்னும் பிரதேசத்தில் இன்று காலை சிறுவர்களுக்கு சலங்கை அணிவிக்கும் விழாவும் கூத்து நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

அண்ணாவியார் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கே.மலர்ச்செல்வன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது ஆண்கள் பெண்களுக்க சலங்கை அணிவிக்கப்பட்டதுடன் கரககூத்து,வசந்தன் கூத்துகளும் நடைபெற்றன.

நவீன தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக கிராம மட்டங்களில் பாரம்பரிய கலைகள் அழிவடைந்து செல்லும் நிலையில் இவ்வாறான கலைகளை வளர்க்கும் பணிகளை சிலர் மேற்கொண்டுவருகின்றனர்.

குறிப்பாக பாரம்பரிய கலைகளில் நவீனகள் புகுத்தப்படும்போது அதன் பாரம்பரியத்தின் கனதி குறைவதன் காரணமாக கிராமிய ரீதியில் அதன் அழிவு நிலை அதிரிப்பதன் காரணமாக அதன் பாரம்பரியங்களை சில கிராமங்கள் தொடர்ந்து பேணிவருவது வரவேற்கத்தக்கது.

































Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate