செவ்வாய், 12 மே, 2015

நாவிதன்வெளி பிரதேசசபை கட்டிடம் முதலமைச்சரினால் திறந்துவைப்பு

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன் பிரதேசசபையின் புதிய கட்டிடம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.


நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் சி.குணரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன்,த.கலையரன்,ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மிக நீண்டகாலமாக தற்காலிக கட்டிடத்தில் இயங்கிவந்த இந்த பிரதேசசபைக்கட்டிடம் நகர எழுச்சி திட்டத்தின் கீழ் சுமார் 40மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த பிரதேசசபைக்கட்டிடத்தில் பொதுமக்கள் அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதேசசபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.











Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate