ஞாயிறு, 15 நவம்பர், 2015

மட்டக்களப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 116 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்றுக் காலை எட்டரை மணியிலிருந்து இன்று காலை எட்டரை மணிவரையுள்ள 24 மணித்தியால கால இடைவெளியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக பாசிக்குடா சுற்றுலாப் பகுதியில் 116 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய அதிகாரி கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.

கிழக்கில் தொடர்ந்தும் மழை வீழ்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை இடிமின்னலுடன் கூடிய மழை வீழ்ச்சி நாடு பூராகவும் நாள் முழுவதும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

ஆகக் கூடுதலாக இன்றைய தினம் 150 மில்லிமீற்றர் மழை வீச்சி பல இடங்களில் எதிர்பார்க்கப்படுவதாகவும் எதிர்வு கூறபப்பட்டுள்ளது.

நாட்டின் தெற்கு, கிழக்கு, வடக்கு, வடமேற்கு கரையோர மீனவர்கள் கடலுக்குச் செல்வது பற்றியும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate