ஞாயிறு, 15 நவம்பர், 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாம் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து வாழவேண்டிய நிலையில் உள்ளோம். - விவசாய அமைச்சர் -கி.துரை -

திலக்ஸ் ரெட்ணம்-
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வாழவேண்டிய நிலையில் உள்ளோம்.அதனை எவ்வாறு முகம் கொடுப்பது என்று பலரும் பல்வேறு விதமாக சிந்தித்துக்கொண்டிருக்கின்றார்கள் என கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சரும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமான கி.துரைராஐசிங்கம் தெரிவித்தார்.
முனைக்காடு கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட
வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிப்பும், இல்லந்தோறும் சேமிப்பு எனும் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு புத்தகம் வழங்கும் நிகழ்வும்  சனிக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில்இ.குகநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது இவ்வருடம் தரம் – 5ம் ஆண்டுபுலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்ற முனைக்காடு விவேகானந்த வித்தியாலய மூன்று மாணவர்களுக்கும், முனைக்காடு சாரதா வித்தியாலய இரண்டு மாணவர்களுக்கும் வங்கிக் கணக்கு புத்தகத்தில் ரூ 5000ம் இட்டு வங்கிப்புத்தகமும் இதற்காக உழைத்து நின்ற ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டது. இதற்கான நிதியுதவியை மா.குமாரசாமி வழங்கியிருந்தார்.
மேலும் இல்லங்கள் தோறும் சேமிப்பு எனும் தொனிப்பொருளில் முனைக்காடு கிராமத்தில் புதிதாக பிறந்த பிள்ளைகளுக்கு அவர்களின் பெயர்களில் ரூ 1000ம் வீதம் வங்கிக்கணக்கில் இட்டு வங்கிப்புத்தகம் வழங்கப்பட்டது. இதற்கான நிதியுதவியை தா.வேதநாயகம் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் விவசாய அமைச்சர் கி.துரைராஐசிங்கம் தொடர்ந்து உரையாற்றுகையில் ஐனநாயகம் என்பது மக்களின் தொகையில்தான் தங்கியுள்ளது.எந்தவொரு செயங்பாடுகளும் தூரநோக்கம் கொண்டதாகவும்,யதார்த்தமாகவும் இருக்க வேண்டும்,சமுகத்தோடு பின்னிப்பிணைந்ததாக இருக்க வேண்டும் மாறாக கற்பனையாக போகின்றபோது அது காற்றாக பறந்துவிடும்.

இப்போது இருந்து நாம் அடுத்தகட்டத்தை நோக்கி நகரப்போகின்றோம் என்றால் முதற்கட்டமாக கல்வியை முன்னேற்ற வேண்டும்,பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும்.இவ்வாறான நோக்கங்களை அடிப்படையாக வைத்தே தூரநோக்கோடு ; புலம் பெயர்ந்து வாழும் உங்கள் உறவுகளான மா.குமாரசாமியும்,தா.வேதநாயகமும் இவ்வாறான உதவிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
போடியார் வீட்டிலே éனைக்கு பாற்சோறு வைக்கும் நாடு என்று காசிஆனந்தன் தனது கவிதையிலேஇந்நாட்டைப்பற்றிச் சொல்லியுள்ளார்.இதன்அர்த்தம் வளமான,தாராள மனப்பான்மையுடையவர்கள் நாம், உண்மையிலேயே நாங்கள் வளம்பொருந்திய மண்ணிலே வாழ்ந்து வந்தோம்.காலம் எம்மை ஒதுக்கி வைத்துள்ளது.இதனால் நாம் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி எங்களை நாங்கள் ஒன்று சேர்க்கின்றவகையில் நாம்துணிந்து பல்வேறு சவால்களை சந்திக்கின்ற வேளையில் இங்கு சிறப்பான நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
துலைவர் தனதுரையில் கூறியது போல் நான் என்று பிரிந்து இருப்பதைவிட நாம் என்று சேர்ந்து இருக்க வேண்டும்.நான் நான் சொல்லும் போதுஇரண்டு உதடுகளும் பிரிந்து விடுகின்றது.நாம் என்று சொல்லும் போது இரண்டு உதடுகளும் சேர்ந்து விடுகின்றது.இது தமிழின் பெருமை நாம் நாம் என்று வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

இங்குள்ள நாங்கள் வாழவேண்டும் என்பதற்காக  புலம்பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகள் பகலில் தூங்கி இரவில் கண்முழித்து உழைத்தே நமக்கு பணம் அனுப்புகின்றார்கள் இதனை நாம் பிரயோசனம் மிக்கதாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
சேமிப்புக்கள் எல்லாம் நமக்குமூலதனமாக விளங்குகின்றது.தாலிஎன்பது அடிமைச்சின்னம் என பெண்ணியல்வாதிகள்கூறுவார்கள் ஆனால் அது எமது முதலீட்டிற்கான மூலதனம் வாழ்வியல் முறையிலிருந்து நாம் மாறிவிடக்கூடாது.
மாணவர்கள். எறும்பு போல் உழைக்க வேண்டும் விரும்பிக்கற்க வேண்டும் இதற்கான சூழ்நிலையை பெற்றோர்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். என்றார்.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தனதுரையில் கிழக்குமாகாணத்தில் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் சனத்தொகை பிரச்சினையை எதிர் கொள்ள வேண்டிய அபாயம் உள்ளது அண்மைய ஆய்வின்படி இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 10குடும்பங்களை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி தமிழ்குடும்பங்கள் 18குழந்தைகளையும், சிங்களக்குடும்பங்கள் 26 குழந்தைகளையும்,முஸ்லிம்குடும்பங்கள் 36 குழந்தைகளையும் பெற்றெடுக்கின்றார்கள் இந்நிலை நீடித்தால் தமது சனத்தொகை எதிர்காலத்தில் என்ன நிலையாகும் என்பதை சிந்தித்துப்பாருங்கள் இதற்கு வேதநாயகம் போன்றோர்களால் முன்னெடுக்கும் திட்டம்  எமது சமுகத்தில் பல முன்னேற்பாடுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இங்கு இரு நிகழ்வுகள் நடைபெறுகின்றது அதைச்செய்பவர்கள்  புலம்பெயர்ந்த நாட்டில்வாழும் உங்கள் சகோதரர்கள். கடல்கடந்து வாழ்ந்தாலும்  உங்களுக்கு பக்கத்திலேதான் இருக்கின்றோம் என்பதற்கு இச்செயற்பாடுகள் சான்றாக அமைகின்றது.
நல்ல செயற்பாடுகளுக்கு வலிமை இருக்கின்றது குமாரசாமி  வேதநாயகம் போன்றவர்கள் நல்ல செயற்பாடுகளையே நமது மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் செய்து வருகின்றார்கள்.இங்குள்ள மாணவர்கள் ஆரம்பக்கல்வியில் பலமாக அடித்தளத்தை பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள்..நீங்கள் எதிர்காலத்தில் உயர்கல்வியினைப்பெற்று இந்த மண்ணுக்கும் நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்றார்.

















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate