மட்டக்களப்பு கோட்டமுனை விளையாடுக் கழகத்தின் ஏற்பாட்டில் ''உதிரம் கொடுத்து உயிர்களைக் காப்போம்'' எனும் தொனிப்பொருளில் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் இரத்ததான நிகழ்வானது எதிர்வரும் (15) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மொபிடல் பிராந்திய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த கழகத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் இரத்ததான நிகழ்வின் 16 வது இரத்ததான நிகழ்வானது கழகத்தின் தலைவர் தருமேந்திரா தலைமையில் குறித்த தினத்தில் காலை 9.00 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது.
தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம் என்பதனை கருத்திற் கொண்டு பொது மக்களும் இதன்போது கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கலாமென கழகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக