இலங்கை போக்குவரத்து சபைக்கான வாழைச்சேனை டிப்போவில் இருந்து பல பகுதிகளுக்கான பேருந்து போக்குவரத்து அனைத்தும் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக குறித்த சாலைக்கான முகாமையளர் எம்.ஐ.எம்.அசிஸ் தெரிவித்தார்.
லங்கா சிறி 24 மணித்தியால செய்தியாளர் நேரில் சென்று வினாவியாபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டர். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இன்று வடகிழக்கு பகுதிகளில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட பூரண கார்த்தால் அழைப்பு காரணமாக சாலையில் போக்குவரத்து இடம்பெறாத காரணத்தால் எங்களுடைய சாலைக்குரிய எந்த விதமான பேருந்துகளும் காலையில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடவில்லை.
இதேபோன்று ஏனைய உப டிப்போக்களான கிரிதென்ன, வாகரை, மட்டக்களப்பு சாலைக்கான பேருந்து அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
உண்மையில் வடகிழக்கு தமிழர்கள் என்ற வகையில் அனைவருக்கும் சமபங்கு இருக்கின்றது. நாங்கள் அரச ஊழியர்கள் அதனால் நடுநிலையானவர்கள்.
ஆனால் மனிதாபிமானம் என்ற அடிப்படையில் எல்லோரும் கவனத்தில் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக