புகையிரத நிலையங்களிலும், புகையிரதங்களிலும் பிச்சை எடுப்பவர்களை முதலாம் திகதி முதல் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் புகையிரத வளாகங்களிலும், புகையிரதங்களிலும் பிச்சை எடுப்பதற்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸார், புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை ஈடுபடுத்தி இன்று முதல் புகையிரத வளாகங்களிலிருந்து, பிச்சைக்காரர்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புகையிரத வளாகங்களிலும், பிச்சைக்காரர்களால் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக