செவ்வாய், 10 நவம்பர், 2015

தீபாவளி தினத்தன்றாவது மகன் வருவாரென எதிர்பார்த்தோம்!- கண்ணீர் மல்கும் தாய் லெட்சுமி

தமிழ் தலைமைகளின் வாக்குறுதியை நம்பி தீபத் திருநாளுக்கு முன்பு எனது மகன் விடுதலை செய்யப்பட்டு விடுவான் என நம்பியிருந்தோம் ஆனால் வெறும் ஏமாற்றத்தையும் துயரத்தையும் தான் தந்திருக்கின்றார்கள் என மட்டு. சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதி ஒருவரின் தாயாரான கனகசபை லெட்சுமி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
எனது மகன் ஒரு அப்பாவி, வேலைக்கு போகும்போது 2006ம் ஆண்டு கருணா குழுவினரால் எனது மகன் பிடிக்கப்பட்டார்.
நான் பலதடவை பல இடங்களுக்குச் சென்று எனது மகனை பார்வையிட்டேன்.
நான் மிகவும் நோய் வாய்ப்பட்ட நிலையில் எனது மகனை பார்க்கக்கூட போக முடியாமல் கையில் பணம் கூட இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றேன்.
சம்பந்தன் ஐயா வாக்குறுதி அளித்தார், கைதிகளின் விடுதலை இம்மாதம் ஏழாம் திகதிக்கு முன்பதாக நடைபெறும் என்று இதுவரைக்கும் என் மகனை காணவில்லை.
இன்று தீபாவளித் திருநாள் ஒரு மகிழ்ச்சியான நாளில் எனது வீட்டில் துக்க தினமானத்தான் இருக்கு.
பிள்ளையான் ஆட்சியில் இருந்த காலத்தில் காலைப் பிடித்துக் கூட கேட்டுப் பார்த்தேன், எனது மகனை விடுதலை செய்ய உதவி செய்யுங்கள் என்று எவரும் எனது மகனைப் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate