கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்தம் என்ற போர்வையில் நாம் பின்தள்ளப்பட்டதன் காரணமாக சனத்தொகையிலும் நாம் பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் நாம் எதிர் காலத்தில் வெற்றிகொண்டு வீறு நடைபோட கல்வி என்கின்ற ஆயுதத்தை அனைவரும் கையில் எடுத்து செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் தெரிவித்தார்.
மட்டக்களப்பு முனைத்தீவு பொது நூலகத்தின் வாசகர் வட்டம் நடாத்திய வருடாந்த பரிசழிப்பு விழா நிகழ்வு நேற்று சனிக்கிழமை மட்டு. முனைத்தீவு சக்தி மகாவித்தியாலய மட்டபத்தில் இடம்பெற்றது.
இந்தநிகழ்வில் பிரதம அதிதியாகக்க கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமது எதிர்கால சந்ததியினரின் கல்வியினை மேலேங்கச்செய்ய வேண்டும் எனவும், அவற்றுக்கு பெற்றோர்களின் பங்களிப்பு இன்றியமையாதது எனவும் தெரிவித்தார்.
பின்தங்கிய பிரதேசமான போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து ஒருவர் இலங்கையிலே உயர் பரீட்சையாகக் காணப்படும் நிருவாக சேவை பரீட்சையில் சித்தி பெற்று நிருவாக அதிகாரி என்ற பதவியினைப் பொறுப்பேற்றவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பிரதேசம் தொடர்ந்தும் பின்தங்கிய பிரதேசமாக இருக்க முடியாது என கூறிய அவர், எதிர் காலத்தில் பல கல்விமான்களும், நிருவாக அதிகாரிகளும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக