
இந்நிகழ்வில் மாநகர பிரதி ஆணயாளர் திரு தனஞ்ஜெயன் வரவேற்பு உரை ஆற்றியதுடன் பழைய மாணவர் சங்கத்தலைவர் திரு பஞ்சலிங்கம் அவர்களால் தலைமை உரையாற்றப்பட்டது. பின்னர் கல்லூரியின் சிரேஸ்ட பழைய மாணவரும் முன்னால் பழையமாணவர் சங்கத்தலைவருமான பொன் தவநாயகம் அவர்களால் வாழ்த்துப்பா கவிபாடப்பட்டது. மேலும் சங்கத்தின் ஆலோசகர் சதாசிவம் அவர்களால் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டு, கல்லூரி அதிபர் அவர்களால் மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைவர் அவர்களால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

0 facebook-blogger:
கருத்துரையிடுக