இந்த நிகழ்வில், நடைபெற்று முடிந்த தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களான, மட்ஃவின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவி செல்வி. தக்சனியா பத்மசுதன், மட்/ பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வன். ஜெகதீசன் கர்ஜிதன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், கரவெட்டி தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் செல்வி. அஸ்வினி சுதாகர் மற்றும் மட்/ மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் செல்வன். முகம்மட் ஜவாகிர் அகம்மட் முஸர்ரப் ஆகியோருக்கு வெற்றிக் கிண்ணங்களும் பரிசுக்கூப்பன்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில், தரம் 5க்குரிய ஆசிரியர்கள் பெற்றோரினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர். பின்னர் அதிபர், பிரதி அதிபர், உப அதிபர்கள், பகுதித் தவைர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரும் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர். பெற்றோர் சார்பில் நினைவுப் பரிசில்களை கல்லூரியின் முன்னைநாள் அதிபரும் பெற்றோரில் ஒருவருமாகிய திருமதி. குலேந்திரகுமார் அவர்களும் திரு. ஜெயகாந்தன் ஆசிரியர் அவர்களும் வழங்கி சிறப்பித்தனர்.
தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பெற்றோரின் நன்றியுரையுடன் நிகழ்வு 1.30 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக