வெள்ளி, 6 நவம்பர், 2015

அட்டாளைச்சேனை பிரதேச சபை புதிய செயலாளர் நியமனம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கணபதிப்பிள்ளை புலேந்திரன், நேற்று வியாழக்கிழமை (05) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றிய சித்திக் ஒய்வு பெற்றுச் சென்றமையால், கடந்த ஐந்து மாதங்களாக பதில் செயலாளராக எஸ்.எம்.கலீல் றகுமான் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் கணபதிப்பிள்ளை புலேந்திரன் கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி வந்தார். துறைநீலாவனைணைச் சேர்ந்த இவர் அரசாங்க துறையில்  கடந்த 32 வருடங்களாக கடமையாற்றி வருகின்றார். மக்களுக்கு சேவையாற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள புதிய செயலாளர் கே.புலேந்திரனுக்கு பிரதேச பையின் உத்தியோகத்தர்கள் வரவேற்பளித்தனர். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate