வியாழன், 12 நவம்பர், 2015

மெதடிஸ்த மத்திய கல்லூரியில் புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்றாம் இடம்பெற்ற மாணவனுக்கு மக்கள் வங்கி பரிசு

மட்டக்களப்பு நகரக்கிளை மக்கள் வங்கியில் “சிசுஉதான" கணக்கினை வைப்பு செய்து புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு” மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அதிபர் ஜே.ஆர்.பி.விமல்ராஜ் தலைமையில் இன்று(12.11.2015) வியாழக்கிழமை காலை 08.30 மணியளவில் பாடசாலையில் இடம்பெற்றது.


இதன்போது இப்பாடசாலையில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்து மாவட்ட மட்டத்தில் 189 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்ற முகமட் ஜவாஹிர் அஹமட் முஷர்ரப் என்ற மாணவனுக்கு 15இ000ஃஸ்ரீ ரூபா பெறுமதியான காசோலையினை பாடசாலைக்கு வருகைத்தந்த மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் ஏ.எம்.வலித்தூர் மற்றும் நகரக்கிளை மக்கள் வங்கி முகாமையாளர் திருமதி.கோமளாதேவி யோகநாதன் ஆகியோர்கள் இணைந்து வழங்கிவைத்தனர்.
1

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate