ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

“போருக்கு வெளியே பேசுதல”; என்ற தொனிப்பொருளில் 45வது இலக்கியச் சந்திப்பு மட்டக்களப்பில்.

போருக்கு வெளியே பேசுதல் என்ற தொனிப்பொருளில் 45வது இலக்கியச் சந்திப்பு மட்டக்களப்பில் நடைபெற இருக்கின்றது. இந்த இலக்கியச் சந்திப்பு ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு தினங்களில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய கட்டடத்தில் 6 ஆய்வரங்குகளை உள்ளடக்கியதாக நடைபெற இருப்பதாகவும் இதற்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளும் நடைபெற்றுள்ளதாகவும் ஏற்பாட்டுக்குழு சார்பாக திரு இஸ்டாலின் ஞானம் தெரிவித்துள்ளார்.

இவ்விலக்கியச் சந்திப்பில் ஆய்வுத் தலைப்புகளையொட்டிய உரையாடல்களும், நிகழ்த்து கலைகளும், ஆவணத் தொகுப்புகளும் இலங்கையிலும், பலம்பெயர் சூழலிலம் வெளிவந்த நூல்களின் அறிமுகமும், நூல்களின் கண்காட்சியும் இடம்பெற இருக்கின்றன.

1988 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐரோப்பாவை மையமாகக் கொண்டு நடந்துவரும் இந்த இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகளில் இலங்கை, இந்தியா உட்பட உலகின் பல பாகங்களிலும் இருந்து வரும் தமிழ் படைப்பாளிகள் கலந்துகொண்டு வருகிறார்கள். 



இந்த இலக்கிய சந்திப்பின் 41வது நிகழ்வு 2013ம் ஆண்டு முதல் தடவையாக இலங்கையில் நடாத்தப்பட்டதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மட்டக்களப்பில் இந்த 45வது சந்திப்பு நிகழவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate