(நித்தி)
கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு சித்தாண்டியில் சிகண்டிமுனியின் அருட்கடாச்சம் நிறைந்த பழம்பதியில் மூன்று சந்திக்கும் நடுவில் நிலைகொண்டிருக்கும் முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தின் ஆலய சிற்ப வடிவமைப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (6) முச்சந்திப் பிள்ளையார் ஆலய அறங்காவலர் சபையினரால் நடைபெற்றது.சித்தாண்டி முச்சந்திப்பிள்ளையார் தற்பொழுது புதிதாக மிகவும் சிறப்பான முறையில் கட்டப்பட்டு வடிவமைப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் ஆலயத்தின் சிற்பங்களை வடிவமைத்த பாரத நாட்டின் தமிழ் நாடு நாகபட்டினத்தைச் சேர்ந்த வரதராஜீலு அசோக்குமார் சிற்ப கலைஞனரின் சிற்ப ஓவியத்தின் அபார திறமையைப் பாராட்டி 'கலைஞான சிற்பவாருதி' என பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதற்கான சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னமும் முச்சந்திப் பிள்ளையார் ஆலய அறங்காவலர் சபையினரால் வழங்வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி முருகன் ஆலயம் மிகவும் வராற்று சிறப்பு மிக்கதொரு ஆலயமாகும். அந்தவகையில் சித்திர வேலாயுதர் முருகனை தரிசிப்பதற்காக வருகின்ற பக்தர்கள் முச்சந்தியில் வீற்றிருக்கும் அண்ணனான விநாயகனை வணங்கிவிட்டே தம்பி முருகனிடத்தில் செல்வார்கள். அந்தளவுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் பிள்ளையாரின் ஆலயம் மிகவும் சிறப்பான முறையிலே கட்டுமானப் பணிகள் முன்னெடுத்துவரப்படுகின்றது.
இலங்கையில் எப்பாகத்திற்கும் செல்லும் பிரயாணிகளை விக்கினகங்களில் இருந்து அவர்களை காப்பாற்றி அருள் பாலித்துக்கொண்டிருக்கும் முச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் வளர்ச்சிக்கு நல்உள்ளம் கொண்ட ஆடியார்களின் உதவிகளின்பால் தற்பொழுது சிறப்பான முறையிலே வடிவமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆலயத்தின் பல்வேறு கட்டுமானப்பணிகள் நிறைவடையாமல் அரைகுறையாக காணப்படுவதால் ஆலயத்திக்கென நன்கொடைகள் வழங்கும் நல் உள்ளங்களை வரவேற்பதாக ஆலய அறங்காவலர் சபையினர் தெரிவித்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக