மட்டக்களப்பு களுதாவளை திருஞாசம்பந்தர் குருகுல பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் குருகுல ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளதுடன், நிருவாக சபை தெரிவும் இடம்பெற்றது.
நடைபெற்ற கூட்டத்தில் சபையின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய விடயங்கள் ஆராயப்பட்டதுடன், புதிய நிருவாக சபை தெரிவு இடம்;பெற்றபோது தலைவராக சா.தயாபரன், உபதலைவராக ச.விபகந்தன், பொதுச்செயலாளராக ச.கோகுலதாஸ், உப செயலாளராக சா.விஜயகாந்த், பொருளாளராக ந.சதீஸ்பரன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
குருகுல சபைக்கான ஆலோசகராக ரி.விநாயகமூர்த்தி, ஏ.மதனராஜன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் குருகுல சபைக்கான உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெற்றது.
குறித்த குருகுல சபைக்கான அடுத்த திட்டமிடல் ஒன்றுகூடல் எதிர்வரும் தை மாதம் இடம்பெற இருப்பதாக சபையில் செயலாளர் ச.கோகுலதாஸ் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக