மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்த கைதியொருவர் தப்பியோடியுள்ளார் என மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதியாக இருந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபோரதீவைச் சேர்ந்த அரசரட்ணம் சசிகரன் (வயது 21) என்பவரே தப்பியோடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்;
மேற்படி கைதி கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பில் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து வந்த நிலையில நேற்று பகல் தப்பியோடியுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக