ஜப்பானிய உயர்ஸ்தானிகர் கெனிச்சி சுகன்னுமா அவர்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையிலான சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) காலை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்றது
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், மற்றும் திணைக்களங்களின் செயலாளர்கள் இதில் பங்கேற்றனர்.
குறித்த சந்திப்பில், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பிலும் விவசாயம் உல்லாசத்துறையை மேம்படுத்துவது மற்றும் வீதி அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், இவ்விஜயமானது தனது முதலாவது கிழக்கு மாகாணத்திற்கான விஜயமாக இருப்பதனால் மாகாணத்தின் நிலை குறித்து அறிந்து கொண்டத்தை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும், இச்சந்திப்பின் பின்னர் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பேனேண்டோ அவர்களையும் சந்தித்து உரையாட இருப்பதாகவும் எதிர்காலத்தில் பல வகையான திட்டங்களை செயற்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக