திங்கள், 2 நவம்பர், 2015

கிழக்கு பல்கலைகழக மாணவர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் வியாழக்கிழமை(29) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுக்கு முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை வலியுறுத்தியும் தமது பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறு கோரியும் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கு உரிமை கோரும் மாணவர்களை தண்டிக்காதே எனும் தொனிப்பொருளில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போதுஇகிகழ்க பல்கலைகழக நுளைவாயில் முன்பாக இருந்து மாணவர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலத்தினை நடத்தியதுடன் ஊவலத்தினை தொடர்ந்து பல்கலைகழக நுளைவாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate