வெள்ளி, 6 நவம்பர், 2015

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு GIT கருத்தரங்கு


 தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாடுசெய்த பொது தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கு மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் இடம்பெற்றது.


நேற்றும் இன்றும் நடைபெற்ற இக் கருத்தரங்கில் 950 மாணவர்கள் பங்குபற்றிப் பயனடைந்தனர். 

மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களின் வழிகாட்டலில் தேசிய வாசிப்புமாத நிகழ்வுகளில் ஒன்றாக இக்கருத்தரங்கும் ஏற்பாடுசெய்யப்பட்டு பொது நூலகத்தினால் நிகழ்த்தப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் கலந்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்ததுடன் இரண்டாம் நாள் நிகழ்வில் புனித மிக்கேல் கல்லூரி அதிபர் மற்றும் புனித சிசிலியா கல்லூரியின் முதல்வர் அவர்களும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்

இந் நிகழ்வு மாநகர பிரதி ஆணையானர் திரு.என்.தனஞ்ஜெயன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன் கருத்தரங்கின் வளவாளராகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது



























Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate