வியாழன், 19 நவம்பர், 2015

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தாயார் காலமானார்!

மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தாயார் ஹாஜியானி பாத்திமா மஹ்மூதுலெப்பை ஆலிம் இன்று வியாழக்கிழமை அதிகாலை காலமாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரது இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ளும் பொருட்டு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் இன்று காத்தான்குடிக்கு விரைந்துள்ளனர்.


காத்தான்டி முன்னாள் நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா, மருத்துவ கலாநிதி டொக்டர் நஜ்முத்தீன், கல்வி ஆலோசகர் மௌலவியா ரஹீமா, சுங்கத்திணைக்கள முன்னாள் அதிகாரி பஷீர் ஆகியோர் இவரது பிள்ளைகளில் குறிப்பிட்டுக் கூறத்தக்கவர்களாகும்.


இன்று மாலை காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளி வாயலில் மதவழிபாடுகள் நடத்தப்பட்டதன் பின்னர் அங்குள்ள மையவாடியில் ஹாஜியானி பாத்திமாவின் பூதவுடல் நல்லடக்கம் நடைபெறவுள்ளது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate