வியாழன், 19 நவம்பர், 2015

சித்தாண்டி முருகன் ஆலயத்தில் சுக்குநூறாகிய சூரன்போர் விழா!


(சித்தாண்டி நிருபர்) கிழக்கின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழும் மட்டக்களப்பு  சித்தாண்டி ஸ்ரீ  சித்திரவேலாயுதர் ஆலயத்தில்  சூரசம்ஹாரம் (சூரன்போர் )  நிகழ்வானது  மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.


இந்துக்களின் சிறப்புமிகு விரதமான கந்தசஷ்டி விரதம் ஆறுநாட்கள் விரதம் இருந்து ஆறாவது நாளன்று முருகப்பெருமான் சூரனை  வதம் செய்யும்  சூரசம்ஹாரம் இடம்பெறுகிறது.

சித்தாண்டி ஸ்ரீ  சித்திரவேலாயுதர் ஆலயத்தில் 17.11.2015  அன்று  பி.ப 03.00 மணியளவில் முருகப்பெருமான் வெளிவீதி  வருகை தந்ததும்  இவ் சூரசம்ஹார  நிகழ்வானது இடம்பெற்று மாலை 06.00 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.

இதன்போது  பக்தர்கள் முருகப்பெருமானிடம் வரம் வேண்டி நிற்பதையும் தர்மம் நிலைபெற்று அதர்மம் அழிவதையும் இன்நிகழ்வானது நினைவு கூறுகின்றது.

இன் நிகழ்வில் இலங்கையின் பலபாகங்களில் இருந்தும் பெரும்திரளான  பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate