திங்கள், 2 நவம்பர், 2015

கொக்கட்டிச்சோலையில் முதியவர் நஞ்சருந்தி தற்கொலை

மட்டக்களப்பு கொக்கடிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் 60 வயதுடைய பாளிப்போடி நேசன் என்ற இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார்.

குடும்ப விவகாரமே இந்த தற்கொலைக்குக் காரணமென தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 6.00 மணியளவில் வயல் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பின்னரே அவர் நஞ்சருந்தியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு பேததனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate