வியாழன், 5 நவம்பர், 2015

போரதீவு தொடக்கம் பழுகாமம் வீதியின் இன்றய நிலை



(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போரதீவு தொடக்கம் பழுகாமம் வரையிலான பிரதான வீதியே இவ்வாறு மிகவும் மோசமடைந்து மழைநீர் தேங்கி நின்று காட்சியளிக்கின்றது. இந்த வீதியானது மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான பிரதான வீதியாகும். இவ்வீதியானது கடந்த ஆண்டு வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் போடப்பட்ட வீதியாகும்

இவ்வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் மாணவர்கள், பாதசாரிகள் தங்களின் போக்குவரத்தை செய்வதில் மிகவும் துன்பப்படுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலுள்ள படுவாங்கரையும், எழுவான் கரையையும் இணைக்கும் பிரதான வீதி மிகவும் குன்றும் குழியுமாக மழைநீர் தேங்கி நின்று போக்குவரத்து செய்யமுடியாமல் இருக்கின்றது. இவ்வீதியில் பயணிக்கின்றவர்கள் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றனர்.

இரண்டு கிலோமீற்றர் நீளமான இவ்வீதியால் பட்டிப்பளை, போரதீவு பற்று போன்ற பிரதேச செயலகங்களுக்கும், பிரதேச சபைகளுக்கும் விவசாய நடவடிக்கைகளுக்காகவும் பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தாந்தோன்றிஸ்வரர் ஆலய வழிபாட்டுக்கும் செல்வதற்காகவும், தங்களின் ஏனைய விடயங்களுக்காகவும் இவ்வீதியால் பயணிக்கும் பாதசாரிகள் மிகவும் ஆமை வேகத்தில் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்னர். இதனால் இவ்வீதியில் பல விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. பலபேர் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. இதே போன்று பல குன்றும் குழியும் காணப்படுவதனால் மழைநீர் தேங்கி டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழ்நிலை உருவாக்கியிருக்கின்றதுதேர்தலில் மக்களின் வாக்குகளை பெற்ற அரசியல்வாதிகளும், வீதி அபிவிருத்தித் திணைக்களமும் மாவட்ட அரசாங்கத அதிகாரிகளும் இவ் வீதியினை குறுகிய காலத்திற்குள் செப்பனிட்டுத் தருமாறு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்










Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate