குறிப்பிட்ட பாடசாலை அக்கரைப்பற்றின் வரலாற்றில் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பாடசாலை. அப்பாடசாலை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் கண்காணிப்பில் அவரின் வீட்டுக்கு அருகாமையில் யாரும் வேண்டாம் நானே போதும் என்ற சேவையில் வைத்திருந்த பாடசாலை. ஆனால் சிலர் சொல்வார்கள் உள்சுவரைப் பூசுங்கள் மீதமிருந்தால் புறச்சுவரைப் பூசலாம் என்று, அந்த நிலமையில் இப்பாடசாலையின் அவல நிலை இங்கே காட்சியளிக்கிறது. பாடசாலையின் முன் தோற்றத்தை மாத்திரம் அழகு படுத்தி மகிந்து கொண்டிருக்கும் நிருவாகத்தினர் பாடசாலையின் உள்ளே உள்ள நிலமையினை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கின்றனர்.
அங்கு உரை நிகழ்த்திய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்:
மழை ஒவ்வொரு வருடமும் பெய்து கொண்டிருக்கிறது. மழையினை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் மழையால் ஏற்படும் வெள்ளம் மற்றும் விபரீதங்கள் ஏற்படுவதனைத் தடுக்க முயற்சிக்கலாம். இங்குள்ள ஒவ்வொரு வகுப்பறைகளும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனைப் பார்க்கின்றபோது பெரும் அதிர்ச்சியுற்றேன். ஏன் உங்கள் ஊர் அமைச்சரிடம் இதனை எடுத்துக்கூறவில்லையா? அல்லது இத்தனைவருடங்களாக செய்ய முடியாமல் இருந்ததா? இப் பாடசாலையின் முக்கிய தேவையாக இருப்பதுவும் இதுதான். இந்த பாடசாலை மைதானம் மீன் பிடிக்கும் குழமாகக் காட்சியளிக்கிறது. இம்மாணவர்களின் நன்மை கருதி என் ஆட்சிக் காலம் முடியுமுன்னர் சிறந்த முறையில் ஒரு கட்டிடத்தை அமைத்துத் தருவேன் என்று குறிபிட்டார்.
அதனைத் தொடர்ந்து அங்கு முதலமைச்சர் மற்றும் அதிதிகளுக்கு பாடசாலை நிருவாகத்தினரால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டதுடன் பாடசாலையிக்கும், ஊருக்கும் புகழினைப்பெற்றுக்கொடுத்த மாணவர்களுக்கும் நினைவுச் சின்னமும் பதக்கமும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் பிரதம அதிதியாக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் , உறுப்பினர் ஏ.எல்.தவம்,அக்கரைப்பற்று வலையக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் மற்றும் பல அதிகாரிகளும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக