வெள்ளி, 13 நவம்பர், 2015

திருமலையில் கர்த்தால் இயல்புநிலை பாதிப்பு

கடந்த சில நாட்களாக சிறைக்கைதிகளால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டமானது ஜனாதிபதியின் தலையீட்டினை அடுத்த கைவிடப்பட்டது. எனினும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எந்த விதமான தீர்க்கமான முடிவும் எடுக்கப்படாத நிலையில் சட்ட ரீதியான நிர்வாக ரீதியான செயன்முறைகளின் மூலமாக குறித்த கைதிகள், பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

மாவட்ட ரீதியில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக ஸ்தாபனங்கள் தமது நிறுவனங்களை பூட்டியும் பாடசாலை மாணவர்கள் பாடசாலையை பகிஷ்கரித்துள்ளதுடன் மாவட்டத்தில் பரவலான வியாபார ஸ்தாபனங்களும் மூடப்பட்டுள்ளது, பெருமளவு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் தமது சேவைகளை இன்று இடைநிறுத்தி ஹர்த்தாலுக்கு ஆதரவளித்துள்ளன. எனினும் போக்குவரத்து வழமை போல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate