புதன், 11 நவம்பர், 2015

அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்படவில்லை!

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்படவில்லை.
இன்று 32 பேர் பிணை வழங்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று நேற்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
எனினும் இன்று சுமார் 24பேரே அழைத்துச் செல்லப்பட்டனர் என சிறைச்சாலை தரப்புக்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களத் தரப்பில் இருந்து எவரும் ஆஜராகாதபடியால், அரசியல் கைதிகளின் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விடுவிக்கப்படவுள்ளவர்கள் தொடர்பான விடயங்களுக்காக தமக்கு பெயர் பட்டியல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்று சிஐடியினரும் மன்றில் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 24ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்க பிணை மறுக்கப்பட்டநிலையில் நீதிமன்றத்துக்கு வெளியில் அழைத்து வரப்பட்ட அரசியல் கைதிகள் தமது போராட்டம் தொடரும் என்றும் தாம் மரணித்தால் உடல் உறுப்புக்களை தானம் செய்யுமாறு அவர்கள் கோரியதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate