முதலாம் இடம் வந்த கவிதை
அரைநிர்வாணமாய் _தமிழும்.அதிகாரவர்க்கமாய் சிங்களமும்.புதிரான தலைக்கனங்களும்.புத்தத்தின் விகாரையும்.பௌத்தத்தின் கலசங்களும்.
அடிமைக்கு அரைவட்டக்கல்லும்.ஆட்சிக்கு சிகிரியாக்குன்றும்.அடிமையின் பச்சை இரத்தமாய்.தேயிலைத்தோட்டமும்.வறுமைக்காய் வசைபாடும்கிழிகளும்.
நீதி கேட்டு ஒழிந்துகிடக்கும்.ஆறாவது நூறும்.குருதி ஊற்றி மனிதம் கலந்த!செம்மஞ்சளாய் ஜொலிக்கிறது
நாகதீவின் நூறு ரூபாய்.
கவிதையாக்கம்
சொற்சிற்பிசபா.
----------------------------------------------------------------------------------
இரண்டாம் இடம் வந்த கவிதை
நூ(ஊ)று ரூபாய் நோட்டு…!!!
மொழிகளின் பேதம் எதுவுமில்லை;
இல்லாத நாடுகள் எங்குமில்லை!
வார்த்தைக்கு இங்கு மதிப்பில்லை;
‘எண்ணம்’ மட்டும் மதிக்கப்பெறும்!
வியர்வையின் ஈரம் பார்த்ததுண்டு;
ரத்தத்தின் கோரம் சுவைத்ததுண்டு!
‘இதயங்’களின் அருகில் இடமுண்டு;
எ(ம)வனையும் (ஏ)மாற்ற திறமுண்டு!
எட்டாத உயரமென யாதுமில்லை;
இதனை விரும்பாது எவருமில்லை!
குழந்தையும் வீசும் குப்பைத்தொட்டி-
இதுவரை காண வாய்க்கவில்லை!
பிணமும் வாய் திறக்கச்செய்யும்-
பணம் - பத்தும்கூட செய்துவிடும்;
இப்பணம் - ‘நூ(ஊ)று’ம் செய்யக்கூடும்!
கவிதையாக்கம்-
மாயவரத்தான்..எம்.ஜீ.ஆர்
-----------------------------------------------------------
மூன்றாம் இடம் வந்த கவிதை.
-----------------------------------------
சீயாய் நாணயம்
உற்று நோக்கினால் மட்டுமே
தெரியும் தமிழ்சொற்கள்
இரண்டு.
வடக்கு,கிழக்கில் வசிக்கும்
நம் தமிழினம் போன்று.
கிளிகள் காதல்மொழி பேசும்
தேன்கூடு தேசத்தில்
தேயிலை பறிக்கும்
தோழிகளுக்கு தெரியுமா?
தாய்நாட்டின் திசைநோக்கி
ஏங்கும்
அகதி வாழ்க்கை.
தொலைந்துபோன
புத்தனின் வாய்மொழி
பாதுகாப்பாய்...
பேழைக்குள்.
உறைந்துவிட்ட குருதி.
மலையக மக்களின்
வியர்வை சிந்திய செம்மண்.
சுற்றித்திரியும்
தவிட்டு்க்குருவி.
இவற்றுள்
எந்த நிறம்
இந்த சீயாய் நாணயம்?
கவிதையாக்கம்
திரு.இன்பா
கவிதையாக்கம்
திரு.இன்பா
முதலாம்.இரண்டாம். மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கான
பதக்கம்+சான்றிதழ் அவர்களின் முகவரிக்கு வந்து கிடைக்கும். தபாலில்.
ஆறுதல் பரிசு பெற்றவர்கள் விபரம்.
+புதுவை பிரபா.
+கிரேஸ் பிரதீபா.
+J.NIRMALA.CHRSTIN
+பி.எம்.கமால் கடைய நல்லூர்
இவர்களுக்கான பரிசு தபாலில் வந்து சேரும்.. சான்றிதழ் மட்டும்.
வெற்றி பெற்ற போட்டியாளர்கள் தங்களின் சரியான முகவரியை ஊற்று மின்னஞ்சலுக்கு ootru2@gmail.comஅனுப்பும் மாறு தயவாக
வேண்டிக்கொள்கிறேன்.
நடுவராக கடமையாற்றிய..
கவிஞர் ரமணிஐயா.
திண்டுக்கல் தனபாலன் அண்ணா.
யாழ்பாவாணன் அண்ணா.
இவர்களுக்கு ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
அன்புடன்
ஊற்று நிருவாக குழுவினர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக