அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண வைத்திய பிரிவின் வைத்திய அதிகாரிகளினால் வறிய மாணவர்களுக்கான உதவி உபகரணங்கள் கிழக்கு மாகாண வைத்திய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அ.லதாகரனின் ஏற்ப்பாட்டில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது.
கடந்த யுத்த சூழ் நிலையில் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு ஈரளக்குளம் மற்றும் உன்னிச்சை போன்ற கிராமங்களிலுள்ள பாடசலை மாணவர்களுக்கு குறித்த உதவிகள் வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண வைத்திய அதிகாரிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து திரட்டிய பணத்தொகையைக் கொண்டு ஈரளக்குளம் மற்றும் உன்னிச்சை போன்ற பாடசாலைகளை தெரிவுசெய்து அவர்களுக்கான புத்த கப் பை, பெறுமதியான பாடசாலை உபகரணங்கள், பாதணிகள் போன்ற பொருட்களை வழங்கிவைத்தனர்.
கடந்த தினங்களில் மாவட்டத்தில் ஏற்ப்பட்ட அடை மழை மற்றும் வெள்ளப் பெருக்கையும் பொருட்படுத்தாது குறித்த பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று அவர்களுக்குரிய உபகரணங்களை வைத்திருந்தனர். இதன்போது மட்டக்களப்பு வைத்திய அதிகாரி உதவிச் செயலாளர் வைத்தியர் ந.மௌலீசன் உட்பட அம்பாறை மாவட்டத்திலும் இருந்தும் பல வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
கிழக்கு மாகாண சங்கத்தினால் இரண்டாவது தடவையாக இவ் உதவித் தொகை வழங்கப்பட்டுவருகின்றது. கடந்த வருடம் (2014) குறித்த அரச வைத்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உதவித்தொகைகள் பாணமையில் நடைபெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக