கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான வதிவிட பயிற்சி வகுப்பானது 73 மாணவிகள் என்.ஜெயராணி தலைமையில் கித்துள் ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்திலும் அதேபோன்று ஆண்களுக்கான வதிவிட பயிற்சி நெறி கரடியனாறு மகா வித்தியாலயத்திலும் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் ஜேர்மன் நம்பிக்கை ஒளியில் தாயகம் நோக்கிய கல்விச் செயற்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது நேற்று 17ம் திகதி நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு.கி.ஜெயசிறில் அவர்களும், அம்பாறை மாவட்ட தலைவர் திரு.றமணிதரன் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் கலந்து கொண்டு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்
0 facebook-blogger:
கருத்துரையிடுக