மொனராகலை சிறைச்சாலையில் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் தங்களது உண்ணாவிரதத்தை இன்று நிறைவு செய்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு மற்றும் பிணை வழங்கி விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதை தொடர்ந்து தங்களது உண்ணாவிரதத்தை நிறைவு செய்துகொள்ளவதாக அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான வியாளேந்திரன் மொனராகலை சிறைச்சாலைக்கு நேரடியாகச் சென்று அரசியல் கைதிகள் மூவருக்கும் பானம் வழங்கி
உண்ணாவிரதத்தை நிறைவுசெய்து வைத்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக