திங்கள், 9 நவம்பர், 2015

தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய பரிசளிப்பு விழா!(photos)

(சுஜா)

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாயத்தில் இன்று (09.11.2015) திங்கட்கிழமை காலை 09.30 மணியளிவில் வித்தியாலய அதிபர் .சிவசம்பு தலைமையில் பரிசளிப்பு விழா ஆரம்பமானது.இவ் பரிசளிப்பு விழாவிற்கு பட்டிருப்பு கல்விவலய கோட்ட கல்விப்பணிப்பாளர் V.திரவியராசா அவர்கள் பிரதம அதிதியாகவும்பட்டிருப்பு கல்விவலய உதவிக் கல்விப்பணிப்பாளர் ஆரம்பக்கல்வி பிரிவு B.வரதராஜன் சிறப்பு அதிதியாகவும் A.உதயகுமார் தேற்றாத்தீவு .வி அதிபர்,.செல்வராசா ஓய்வு நிலை நிர்வாக உத்யோகத்தர்,சி.கனகசூரியம் ஓய்வு நிலை அதிபர், K.சண்முகம் ஓய்வு நிலை  ஆசிரியர் மற்றும் .சுந்தரலிங்கம் ஓய்வு நிலை அதிபர் ஆகியோர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டனர்.

தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலத்தில் 2014 வருடம் மற்றும் இவ் வருடம் புலமை பரிசில் 70 புள்ளகளை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 2014 ஆண்டில் வகுப்பு ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் இவ் பரிசில் வழங்கி பாராட்டப்பட்டது.

புலமை பரிசில் பரீடசைக்கு மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் கோமதன்  அவர்களையும் இவ் பரிசளிப்பு விழாவில் கௌரவித்ததுடன் மாணவர்களின்  கலை நிகழ்சிகளும் அரங்கேற்றப்பட்டன.














Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate