ஞாயிறு, 15 நவம்பர், 2015

TMVP கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசாமி நந்தகோபன் (ரகு ) அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவுதினம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்றும் நேர்மையுடனும் சமூக சிந்தனையுடனும் செயற்பட்டுவருவதன் காரணமாக எமது கட்சி யாரையும் கண்டு அச்சம்கொள்ளத்தேவையில்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித்தலைவர் கே.யோகவேள் தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் ரகு என்றழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபனின் 07வது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூரப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் அதன் பிரதித்தலைவர் கே.யோகவேள் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரவியம்,கிழக்கு மாகாணசபையின் அம்பாறை மாவட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ்.புஸ்பராஜா,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அசாத் மௌலானா உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது குமாரசாமி நந்தகோபனின் உருவப்படத்துக்கு ஒளியேற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் மௌன ஆஞ்சலியும் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டதுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.






















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate